விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது கோபி தொடர்ந்து பாக்யாவை பின் தொடர்ந்து வருகிறார். இதற்கு காரணம் பாக்கியா ரஞ்சித்துடன் நெருங்கி பழக தொடங்கி இருப்பதுதான். இதன் காரணமாக பொறாமையில் இருக்கும் கோபி குடித்துவிட்டு பாக்யா குறித்து பெருமையாக பேசி ராதிகாவிடம் சிக்கிக்கொள்கிறார்.

இதுபற்றி கோபி பாக்யாவிடமே நேரில் பேசியுள்ளார். பாக்யா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவரை கோபி வழிமறித்து ரஞ்சித் உடன் பைக்கில் சென்றது பற்றி கேட்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்கியா “அதை கேட்க உங்களுக்கு உரிமையில்லை. என்னை பாலோவ் பண்ணாதீங்க என கூறிவிட்டு போகிறார்.இதனால் கோபி கடும் அதிர்ச்சியில் நிற்கிறார். தற்போது இதுகுறித்த புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.