பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்டோபர் 23ஆம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கு, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் மாலை 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு ஆனதும் சன்னதி திருக்காப்பிடப்படும்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி அன்று காலை 11.30 மணி அளவில் அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும் எனவும் படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப் காரில் வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இந்த நாட்களில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.