தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த், எழுதுபொருள் துணை ஆணையராக சோபனா மற்றும் கைவினை மேம்பாட்டு கழக இயக்குனராக கவிதா ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.