தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பள்ளிக்கூடம் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.