விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக மாறுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவருடைய வெற்றி வாய்ப்பானது அசீமின் பக்கம் சாய்ந்தது.

இந்நிலையில் வெளியே வந்த இவர் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்தவகையில் விருதுநகரில் நடக்கும் தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்க பிக்பாஸ் விக்ரமன், சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பலமுறை கேள்வி எழுப்பியும் தமிழில் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்? என குறிப்பிட்டுள்ளார்.