ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன் பிடித்து துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது  அப்போது ஒரு படகில் ஏற்பட்ட தீ மற்ற படகுகளுக்கும் பரவ சுமார் 35 பைபர் இயந்திர படகுகள் உட்பட 40 படகுகள் தீயில் எரிந்து நாசம் ஆகியுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மர்ம நபர்கள் படகுக்கு நெருப்பு வைத்திருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.