
கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. இது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்றாலும் கூட ஆபத்தான வைரஸ் ஆக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.