
சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசால் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்திலும் அரசு சேவை இல்லம் ஒன்று அமைந்துள்ளது.
அங்கு தங்கி இருந்து கல்வி பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையை சேர்ந்த காவலாளி மேத்யூ. இவர் அந்த சேவை இல்லத்தில் தங்கி இருந்து 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் சிறுமிக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட மேத்யூவை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மேத்யூ -வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மேத்யூவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.