
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தாமுக்கு சென்று கொண்டிருந்த ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஹெலிபேடுக்கு பத்து மீட்டர் முன்பாகவே இயந்திரம் செயலிழந்ததால், விமானி தாமதமின்றி நெடுஞ்சாலையின் ஒரு காலியான பகுதியைத் தேர்வு செய்து ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.
ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஐந்து பயணிகள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. நிபுணர்கள் தெரிவித்ததாவது, அவர் ஒரு நொடியும் தாமதித்திருந்தால் ஹெலிகாப்டர் மலையில் மோதியிருக்கலாம் அல்லது சாலையில் நேரடியாக வீழ்ந்திருக்கலாம் என கூறினர்.
उत्तराखंड : क्रिस्टल कंपनी के हेलीकॉप्टर ने बड़ासू हेलीपेड से केदारनाथ के लिए उड़ान भरी थी। इसमें पायलट सहित 6 लोग सवार थे। तकनीकी दिक्कत आने की वजह से सड़क पर ही हेलीकॉप्टर उतारना पड़ा। इस हादसे में पायलट को मामूली चोट आई है। एक कार भी चपेट में आकर क्षतिग्रस्त हो गई है। https://t.co/z3oGffiONy pic.twitter.com/0QgptPM4gV
— Sachin Gupta (@SachinGuptaUP) June 7, 2025
அவசரமாக தரையிறங்கியபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு காரில் மோதியது. காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். ஹெலிகாப்டரின் வால் பகுதி முறிந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் குழு அதை சரிசெய்து வருகிறது.
இந்த ஹெலிகாப்டர் கேதார்நாத்திலிருந்து ஒரு ஆபத்தான நோயாளியை அழைத்து வர புறப்பட்டதுதான். புறப்பட்ட சமயத்தில் வானிலை சாதகமாக இருந்ததாலும், தொழில்நுட்பக் கோளாறு கடைசி சில நிமிடங்களில் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பனிமலையங்கள் மற்றும் உயரமுள்ள பகுதிகளில் இயந்திரங்களின் மீதான அழுத்தம் அதிகரிப்பதாகவும், அவ்வப்போது இந்த வகை சிக்கல்கள் நிகழ்வதாகவும் அவர்கள் கூறினர். சம்பவம் நடந்ததுடன் அருகிலுள்ள கிராம மக்கள் ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறக்கும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நேரத்தில் சாலை பகுதி காலியாக இருந்ததால், பேரழிவான விபத்தொன்று தவிர்க்கப்பட்டது. கிராம மக்கள் உடனடியாக ஹெலிகாப்டருக்கு அருகே சென்று பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
காவல்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறை குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்து, பயணிகளின் உடல் நலத்தை பரிசோதித்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பினர். இதுகுறித்த விசாரணையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.