கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 11 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்த தகவலின் மீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினால் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.