மத்திய அரசின் திட்டத்தினால் பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் ஓராண்டு திட்டத்தை BJP நாடு முழுவதும் இன்று துவங்குகிறது.

2024 ஆம் வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதை எதிர்கொள்வதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகையில் பாதி அளவிற்கு உள்ள பெண் வாக்காளர்களை கவரும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் மத்திய அரசின் பல திட்டங்களின் மூலம் பயனடைந்த ஒரு கோடி அளவிலான பயனர்களை கண்டறிந்து அவர்களோடு செல்ஃபி எடுக்கும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த 1 கோடி அளவிலான பெண் பயனாளர்களை கண்டறிந்து அவர்களுடன் கட்சி உறுப்பினர்கள் செல்பி எடுக்க வேண்டும். இதற்காக மகளிர் பிரிவுக்கு செல்பி எடுப்பது எப்படி என BJP பயிற்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு பிப். வரை இந்த பிரச்சாரம் நடக்க உள்ளது.