காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலம் போர்பந்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிகட் வரை இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் செய்தார். இந்நிலையில் முதற்கட்ட பயணம் முடிவடைந்த நிலையில் அந்த யாத்திரையில் இருந்து இரண்டாவது கட்டையாத்திரை வேறுபட்டதாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் எனவும் கூறப்படுகிறது.