ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு ரயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா மற்றும் டெட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இச்சம்பவம் நடந்துள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை பயணிகள் சிலர் பிடிக்க முயன்ற போது, ரயிலை நிறுத்தி, கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.