சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று( 28ம் தேதி முதல் )ஜனவரி மாதம் 30ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் சென்னையிலிருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.