தமிழகத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 28ஆம் தேதி இன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைத்தீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த முகாம் நடைபெறும் நிலையில் இதில் உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் மற்றும் ஓய்வூதியத்தாளர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பித்தல், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.