மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்திற்கு அருகே நேற்று மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறுமிகள் உட்பட பலரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.