ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.