சூரத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல தனது குடும்பத்துடன் நபர் ஒருவர் ரயிலில் எறியுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு அருகே அமர்ந்தபடி தூங்கிய அந்த நபர் 13 மணி நேரமாக எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பின்னர் அமர்ந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இது தெரியாமல் மணிக்கணக்கில் அவர் அருகில் அமர்ந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.