தமிழகத்தில் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மற்றும் தயிர் உள்ளிட்ட அனைத்து விதமான பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆவின் பொருள்களுக்கான விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டு வருவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருதி பால் கொள்முதல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு மதுரை ஆவின் நிர்வாகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு லிட்டர் ஆவின் நெய் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பொருள்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.