டெல்லியில் ஏசிபி யாஷ்பால் சிங்கின் மகன் லக்ஷ்யா சவுகான். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களான பரத்வாஜ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதாக கூறிவிட்டு லக்ஷ்யா சவுகான் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் லக்ஷ்யா சவுகான் வீட்டிற்கு வராத நிலையில் மகனை காணவில்லை என்று யாஷ்பால் சிங் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடங்கிய நிலையில் லக்ஷ்யா சவுகானின் சடலம் கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சவுகானுடன் சென்ற அபிஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பரத்வாஜ் சவுகான் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால் கோபத்தில் அபிஷேக்கின் உதவியோடு லக்ஷ்யா சவுகானை கால்வாயில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமுறைகாக உள்ள பரத்வாஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.