இந்தியாவில் தமிழக முற்பட பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி தற்போது இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதாவது அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வசதியாக மின்சார்ஜிங் நிலையங்களை வைக்க உள்ளதாகவும் மார்ச் மாதத்திற்குள் அதற்கான பயன்பாடு செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.