ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், இளம்பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் பின்னால் வரும் இளைஞர், திடீரென அந்தப் பெண்ணின் உடையைத் தூக்கிவிட்டுவிட்டு மிகச் சாதாரணமாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு ராஜஸ்தான் மாநில பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

“>

 

பட்டப்பகலில் பொதுவெளியில் அரங்கேறிய இந்த ஈவ் டீசிங் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.