மணல் கயிறு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம். கன்னடம் போன்ற படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்த இவர் பிரசாந்த் உடன் ஜோடியாக வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்த பின்பு திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியுள்ளார். வினோதினி தன்னுடைய கணவர் விபத்தில் சிக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 2019 ஆம் வருடம் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் கணவரும் மீது மோதிவிட்டு சென்றார்கள்.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் வெறும் பத்தாயிரம் மட்டுமே அபதாரம் செலுத்தி விட்டு சென்று விட்டார்கள். தனி ஆளாக கஷ்டப்பட்டு இருக்கும் இவருக்கு சிலர் மட்டுமே உதவி செய்துள்ளார்களாம்.  கணவர் குடும்பத்திலிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் இருந்து இவருக்கு நடிகர் சங்கத்தினரின் உதவி கிடைத்திருந்தால் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் தனியாக நின்று தன்னுடைய கணவரை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.. என்னுடைய குடும்பத்திற்காக நான் மட்டுமே இருந்தேன். எப்படியாவது என்னுடைய கண்ணாவரை காப்பாற்றி குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது என்று கூறினார்.