பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் நிலையில் இளைஞர் ஒருவர் அதனுடைய கோபத்தை இன்னும் கூட்டும் விதமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும், சில தருணங்களில் கோபத்தையும் வெளிப்படுத்தும்.
பாம்பை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் நாம் வீடியோவாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பாம்பு ஒன்று படமெடுத்து சீறி வருகிறது. இதை இளைஞர் ஒருவர் சீண்டியுள்ளார். என்னதான் பாம்பு கோபத்தில் காணப்பட்டாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அதை வெறுப்பேற்றுகிறார் . பலரும் இளைஞருடைய செயலுக்கு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலரோபடமெடுத்த பாம்பு கடிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram