மலேசியாவில் இருந்து வைரலாகும் ஒரு காணொளி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மனிதன் பசியுடன் இருந்த புலியிடமிருந்து தப்பிக்க மரத்தின் மீது தொங்கிக் கொண்டு உயிரைக் காப்பாற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த மனிதர் கூறுகையில், புலி இரையைத் தேடி கீழே சுற்றித் திரிந்ததால், தன்னால் கீழே இறங்க முடியாமல் நான்கு மணி நேரம் உயரமான மரத்தின் தண்டில் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

வீடியோவில், அடர்ந்த காட்டின் நடுவில் கைவிடப்பட்ட பைக்கின் அருகில் புலியின் உறுமல் ஒலி கேட்க, அதே சமயம் மனிதன் மரத்தின் மேலே பதட்டத்துடன் நிற்கும் காட்சியும் காணப்படுகிறது. இதனால், பல நெட்டிசன்கள் அந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த  வீடியோ முதலில் டிக்டாக் தளத்தில் வெளியிடப்பட்டது. அது அங்கு 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றதுடன், பின்னர் ஃபஹத் எம்.கே. என்ற பேஸ்புக் பயனரின் பக்கத்தில் பகிரப்பட்டபோது, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும், கருத்துகளையும் பெற்றது.

ஆனால், தற்போது அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஃபஹத் எம்.கே. உண்மையில் ஒரு உள்ளடக்க உருவாக்குபவர் (Content Creator) ஆவார். இது உண்மையான சம்பவம் அல்ல, அவரால் உருவாக்கப்பட்ட ஒரு நாடக காட்சியானது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஃபஹத், நகர்ப்புற புனைவுகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வீடியோக்களை உருவாக்குவதில் பிரபலமானவர்.

இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் விவாதத்தை கிளப்பி வருகிறது. மேலும் சிலர் அந்த மனிதரின் “துணிச்சலை” பாராட்டினாலும், பலர் இதை “பார்வைகள் பெறும் நாடகம்” என்று விமர்சிக்கின்றனர். மேலும், “யாராவது எப்போதும் மரம் ஏறும் உபகரணங்களை எடுத்துச் செல்கிறார்களா?” என்ற கேள்வியும் இணையத்தில் நகைச்சுவையாக பரவி வருகிறது.

https://www.facebook.com/fahad.mk.948/videos/2169641783533794/?t=0