நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார்.  ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் இரங்கல்தெரிவித்து வரும் நிலையில், அவரது உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின் பேசிய அவர், “நேற்று கூட அவரை சந்தித்தேன். இன்று இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் படுத்திருக்கும் போது கூட ஆசிர்வாதம் பண்ற மாதிரியே இருக்கு” என கண்ணீர் மல்க நா தழுதழுத்து பேசினார்.