மதுரையின் அனைத்து கோயில் திருவிழாக்களிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் இந்த தாத்தாவை பார்த்திருக்கலாம். பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்குவதையே ‘இறைத் தொண்டாக’ எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை செய்துவந்தார். திருநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ மூர்த்தி என்ற பெயர் கொண்ட விசிறித் தாத்தா நேற்று அதிகாலை காலமானார்.