உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஸ்கூட்டர் மோதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சென்ற தம்பதியினருக்கும் ஒரு இளைஞர் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சுமார் 6 இளைஞர்கள் அந்தத் தம்பதியை சரமாரியாகத் தாக்கினர்; இதில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலேயே பலமுறை உதைத்ததில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
<a href=”http://

“>
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மீரட் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தேடி வரும் காவல்துறையினர், இத்தகைய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.