நடிகை சுரேகா வாணி தமிழில் உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, தெய்வமகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்கள் தான் அதிகமாக நடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2019 ஆம் வருடம் சுரேகா வாணியின் கணவர் உடல்நல குறைவின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் உள்ளார்.

இதற்கிடையில் இவர் தன்னுடைய பெற்றோர்கள் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இவர் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் 45 வயதான இவர் ஆண் நண்பர் ஒருவரோடு நைட் பார்ட்டியில் முத்தம் கொடுப்பது போன்று எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.