நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே கோடை வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ ஏற்பட்டு ஏராளமானவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் 37 பேர் காட்டுத்தீக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.