திருப்பூரில் நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த யோகிதா(6), சித்தார்த் (4), மோனா ஸ்ரீ (4), கவினேஷ் (3) ஆகிய நான்கு குழந்தைகளும் நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய் என கூறப்படும் விஷக்காயை சாப்பிட்டு உள்ளனர்.

அதன் பிறகு வீட்டுக்கு சென்ற போது திடீரென குழந்தைகள் வாந்தி எடுத்ததால் பெற்றோர்கள் அச்சமடைந்தனர். உடனே குழந்தைகளை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அங்கு மருத்துவர்கள் விஷக்காயை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.