சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் திறந்த நிலையில் உள்ள வாசல் படிக்கட்டில், ஒரு முதியவர் எவ்விதப் பிடிப்பும் இன்றி சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்கிறார்.
ரயிலின் வேகத்தையும், கீழே தெரியும் தண்டவாளங்களையும் பார்க்கும்போது எந்த நேரத்திலும் ஒரு விபரீதம் நடக்கலாம் என்பது புரிகிறது. இருப்பினும், அந்த முதியவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “வறுமை என்பது ஒரு மனிதனைச் சாவுக்கே சவால் விட வைக்கும்” என்று வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
गरीबी बहुत बुरी होती है मौ@त से
भी समझोता कर लेती है उपर वाला
ऐसी बजबूरी किसी को ना दे😢 pic.twitter.com/MTvRAd4OMM— S marwadi (@s___marwadi786) April 1, 2026
ஒருவேளை ரயில் பெட்டியின் உள்ளே செல்ல இடமில்லையா அல்லது பயணச்சீட்டு வாங்க வசதியில்லையா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்வளவு முதிர்ந்த வயதில் ஒருவருக்குப் பாதுகாப்பு இல்லாத பயணம் அமைந்தது சமூகத்தின் அவலத்தையே காட்டுகிறது.
இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில், அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் இது போன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
