உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 5 வயது சிறுவன் தான் படித்து வந்த பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் மதுக்கடையை அகற்றகோரி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்திரபிரதேச  அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி பெறுகின்றனர்.