நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் கருக்கா வினோத் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்று கருக்கா வினோத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று முழக்கம் எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.