தல அஜித் நடிப்பில் சென்ற 1999-ம் வருடம் ரிலீஸ் ஆன “வாலி” திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதோடு கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் டைரக்டில் உருவாகி இருக்கும் “பொம்மை” படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து உள்ளார்.

இந்த படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது “பொம்மை படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் பொம்மையாக நடித்து உள்ளார். ஆனால் உண்மையில் பார்ப்பதற்கும் அவர் பொம்மை தான். படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது” என்று அவர் கூறினார்.