கடந்த 2007 ஆம் வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்பொழுது ஆன்ட்ரியா பிசாசு 2 நோ- எண்ட்ரி, கா, மாளிகை போன்ற படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துளி என்ற படத்தில் நடித்துவரும் ஆண்ட்ரியா, அதில் ஒரு காட்சியில் நடித்தபோது மிகவும் கூச்சமாக இருந்ததாகவும், அது புதுமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், நிஜ வாழ்க்கையில் இதைவிட பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்தார்.