நாங்குநேரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், “மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு போகிறார்கள். பள்ளியில் ஜாதி சண்டை நடக்கிறது. இதற்கு திரைப்படங்கள்தான் காரணம். சினிமா, சமூகத்துக்கு நல்லதை சொல்ல வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையை படங்களில் பேச வேண்டும். அதைவிட்டு வேறு எதையோ காண்பிக்கிறார்கள்.

படங்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதுமாதிரியான படங்கள் தான் ஓடுகின்றன. எல்லோரும் வாழ்வது முக்கியம், நல்ல கதைகள் நிறைய இருக்கின்றன. அதை படமாக எடுக்கலாம். சினிமா துறையில் மாற்றம் வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.