பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது வரவு எட்டணா செலவு பத்தணா என்ற தலைப்பில் கலந்து கொண்டவர்கள் விவாதத்தில் நடுத்தர ஏழை மக்களின் செலவு அளவுக்கு அதிகமாக செல்கின்றது. இதற்கு மற்றொரு வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பெண் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 19 ஆண்டுகள் ஆகியும் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். தனது கடின உழைப்பால் ஒரு கோடிக்கு வீடு கட்டியுள்ளார். இதற்கு காரணம் தன்னுடைய வைராக்கியம் என்று கூறி அரங்கத்தில் கெத்து காட்டியுள்ளார்.