காட்டின் உலகம் என்றாலே மர்மங்களால் நிரம்பியது. அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வது  கடினம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு கொழுத்த காட்டுப்பன்றி, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் இரக்கமற்ற வேட்டைக்காரனாகக் கருதப்படும் சிறுத்தையை எதிர்த்து நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி @ParveenKaswan என்பவர் தனது ‘X’  கணக்கில் பகிர்ந்துள்ளார். இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான விருப்பங்களைப் பெற்றுள்ளது.

வீடியோவில், ஒரு புதருக்குள் அமர்ந்திருந்த சிறுத்தையை ஒரு காட்டுப்பன்றி எதிர்பாராதவிதமாக வேட்டையாட முயற்சிக்கிறது. ஆரம்பத்தில், இருவரும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை. ஆனால், பன்றி அருகில் வந்தவுடன், சிறுத்தை ஒரு கணம் பதற்றமடைகிறது. ஆனால் எதிர்பார்த்ததைப் போன்று சிறுத்தை தாக்கவில்லை. பதிலாக, அது பீதி கொண்டு பின்வாங்குகிறது.

பன்றி எப்படியும் பயப்படும் என நினைத்திருந்த நம்மை வியக்க வைத்தது – சிறுத்தை, பன்றியின் முன்னிலையில் ஓடிவிடுகிறது. பன்றி கூட சிறிது தூரம் அந்த சிறுத்தையை துரத்தி ஓடுகிறது.

இந்த வீடியோவைக் கண்ட மக்கள், “சிறுத்தையை விட காட்டுப்பன்றிகளும் வலிமையானவை!” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், “இதை போன்ற காட்சியை முதன்முறையாகத்தான் பார்க்கிறேன்” என்றும் சிலர் பகிர்ந்துள்ளனர்.

காட்டு உலகம் எப்போதும் எதிர்பாராத அதிர்ச்சிகளை வழங்கும். அந்தவகையில், இந்த வீடியோ காட்டுப்பன்றியின் வலிமையை உணர்த்தும் நிஜ உதாரணமாக இருக்கிறது.