தமிழ்நாடு முழுவதும் நாளை 1021 மருத்துவர்களுக்கு பணிநீயமான ஆணை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், 983 மருந்தாளுனர்கள், 1266 சுகாதார அமைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.