அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.