பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தை தொடங்கி வைக்க நாளை மறுநாள் (ஏப் 8)  தமிழகம் வருகிறார். அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.

பல்லாவரம் பகுதியில் பொதுமக்களை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து ஏப்.9 முதுமலைபுலிகள் சரணாலயம், யானைகள் முகாமை பார்வையிடுகிறார். முதுமலை ஆஸ்கர் தம்பதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.