தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் நாளை(ஜன., 9) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இந்த பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் அரிசி குடும்ப ரேஷன் அட்டை தாரர்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ளதால், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் உள்ளிட்டவைகளை கவனித்து இந்த பரிசு தொகுப்புகளை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.