கோடம்பாக்கம் -தாம்பரம் ரயில் நிலையம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையம் இடையே பிப்ரவரி 25 காலை 11 மணி முதல் பிற்பகல் 3 .15 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் சென்னை- கடற்கரை தாம்பரம்- செங்கல்பட்டு கடற்கரை முதல் அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் மறுவழித்தடத்தில் தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட இருக்கிறது.

பயணிகளுடைய வசதிக்காக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு காலை 11:55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1:45, பகல் 1.55, பிற்பகல் 2:40 பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் மறுவழித்தடத்தில்  செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு காலை 9:30, காலை 9:40 காலை 10:55, காலை 11:5, 11 30 பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.