திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து 4 வருடங்கள் ஆகிறது. இந்த மாவட்டத்தில் தற்போது 5-வது மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென்காசி மாவட்டம் ஒரு விவசாயம் சார்ந்த மாவட்டம். நான் ஒரு விவசாயி மகன். எனவே விவசாயிகளின் குறைகளை கனிவுடன் கேட்டு உடனடியாக அதை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன்.

அரசின் திட்டங்கள் உரிய நபர்களுக்கு சேர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் முக்கிய சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என மூன்று சீசன்கள் மட்டும் இன்றி அனைத்து மாதங்களும் சுற்றுலாப் பயணிகள் வருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்க தன்னுடைய அலுவலகம் திறந்தே இருக்கும் என்று கூறினார்.