சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், கருணாநிதி தன்னையும் வளர்த்துக்கொண்டு தமிழையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் இடம்பெறச் செய்தவர் கலைஞர். அவரை நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகையாகாது. கலைஞர் போன்று நடுவகிடு ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று சிறுவயதில் என் அக்காவிடம் சொல்வேன். பலவற்றை அவரிடம் காப்பி அடித்துள்ளேன் என தெரிவித்தார்.