தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக அளவில் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொங்கல் விடுமுறையில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்.எனவே பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வது நல்லது.