புஷ்பா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை தான் அனசுயா பரத்வாஜ். இவர் காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருடைய ஜோடி பொருத்தம் சரியில்லை, காசுக்காக அவரை திருமணம் செய்து உள்ளீர்களா என கேள்வி எழுப்பி பல விமர்சனங்களை செய்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த அவர், காசை தாண்டி முதலில் சிந்திக்க கற்றுக்கொள், என் கணவரிடம் மட்டும் தான் காசு இருக்கிறதா? என்னிடம் இல்லையா? நான் உன்னை செருப்பால் அடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.