தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில் நேற்று படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு சிவகார்த்திகேயன் கோவிலில் இருந்து வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க கூட்டமாக வந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.