அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என உறுதி கூறியுள்ளார். அதிமுக தொடங்கியது முதல் இன்று வரை சோதனைகளை சந்தித்து வருகிறது.

நீதிமன்றம் மூலம் கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் அன்றும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்ததாக சாடிய அவர், தான் முதல்வராக பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபித்த போது ஸ்டாலின் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் சாதாரண கிளைச் செயலாளராக தொடங்கிய எடப்பாடி, தான் அதிமுகவில் உயர்ந்ததற்கு இதுதான் காரணம் என்று மனம் திறந்து பேசி உள்ளார். உழைப்பும் விசுவாசமும் இருந்ததால் அதிமுகவில் நான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். இளைஞர்களும் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.